tamilnadu

img

கொரோனாவுக்கு உ.பி. அமைச்சர் பலி

லக்னோ:
கொரோனா தொற்று பாதிப்பால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜக அமைச்சர்  உயிரிழந்தார்.

உத்தரப்பிரதேசத்தில் பாஜகவின் யோகி ஆதித்யாத் தலைமையிலான அமைச்சரவையில்  தொழில்துறை கல்வி  அமைச்சராக இருந்தவர் கமலா ராணி வருண். 62 வயதான இவருக்கு கடந்த மாதம் 18 ஆம் தேதி கொரோனா தொற்று வைரஸ் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்தது.எனினும், அவருக்கு  தொற்று பாதிப்பு தீவிரம் அடைந்தது. நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு உயிர்காக்கும் வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப் பட்டது. மருத்துவர்கள் கடும் முயற்சிகள் எடுத்த போதிலும் சிகிச்சை பலனின்றி ஞாயிறன்று கமலா ராணி உயிரிழந்தார்.கமலா ராணி 2 முறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராக இருந்தவர். பல்வேறுநாடாளுமன்ற குழுக்களிலும்செயல்பட்டவர்.

;